Fr. ஸ்டேன் சுவாமி தினம் – ஜூலை 5 | திண்டுக்கல் சக்தி கலைக் குழுவினரின் பறை முழக்கமும், கலை நிகழ்வும்

People's Watch
People's Watch
365 بار بازدید - 2 سال پیش - அருட்தந்தை ஸ்டான் சுவாமி அவர்களின் முதலாம்
அருட்தந்தை ஸ்டான் சுவாமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வானது திருச்சி அருகே உள்ள அவரது சொந்த மண்ணான விரகாலூரில் கடந்த 05.07.2022 அன்று நடைபெற்றது. காலை நினைவேந்தல் திருப்பலிக்குப் பின் ஆலயத்தின் முன் பகுதியில் அமைக்கப்பட்ட நினைவுத்தூணில் அஞ்சலிக்குப் பின், நான் ஒரு மௌன சாட்சி அல்லன் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் மாலை 5 மணிக்கு விரகாலூர் கிராம மக்கள் முன்னிலையில்  அரசியல் கட்சியினர், கத்தோலிக்க சபையினைச் சேர்ந்த அருட்சகோதாரர்கள், அருட்சகோதரிகள், துறவற சபையினர், இயக்கங்கள், குடிமைச் சமூக அமைப்புகள், மனித உரிமைக் காப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்ற பொது அரங்கம் நடைபெற்றது. முன்னதாக திண்டுக்கல் சக்தி கலை குழுவினரின் பறை முழக்கம், நடனம் மற்றும் ம.க.இ.க குழுவினரின் குரலிசையோடு பொது அரங்கம் தொடங்கியது.
2 سال پیش در تاریخ 1401/04/17 منتشر شده است.
365 بـار بازدید شده
... بیشتر